Monday, November 25, 2013

வல்லமைச் சூரியனாய் வழிகாட்டும் பேரொளி

வீரத்திருவே
எங்கள் வேரின் தணலே
விடியாத வாழ்வுக்கு
வெளிச்சம் தந்த
ஈகப்பெரு நதியே....

அகவை ஐம்பத்து ஒன்பது காணும்
அணையாச் சுடரே
அன்பின் உருவே
அலையாய் கரையாய்
நிலவாய் நீராய் நெருப்பாய்
நீயே எங்களின் நிச்சயம்....

ஏன்றென்றும் எங்களின்
வழிகாட்டி ஒளிகாட்டி
வுரலாற்றின் திசைகாட்டி
எல்லாம் நீயே
எங்களின் தலைவனே....

பெருமைமிகு தோழனே
பெறுதற்கரிய பெருமையே
தலைநிமிரும் வீரத்தையும்
ஈகத்தையும்
தந்த பேரூற்றே....

தளபதியே எங்களின் தந்தையே
எல்லாமுமான வல்லமையே
நீ பிறந்த பின்னாலே
நாங்கள் வீரம் பெற்றோம்
விடுதலையின் சுவையறிந்தோம்...

நீயில்லாமலெங்களுக்கு
நிமிர்வில்லை நண்பனே
நீயே எங்களின்
வல்லமைச் சூரியனாய்
வழிகாட்டும் பேரொளி
வாழ்த்துகிறோமுன்னை.

26.11.2013

No comments: