யுத்தத்தினால் காயமுற்று நரம்புகள் பாதிக்கப்பட்டு கழுத்துக்குக் கீழும் இடுப்புக்கு கீழும் உணர்வற்றுப் போயுள்ள அறுபது பேருக்கான உதவியை நேசக்கரம் நாடிநிற்கிறது. படுக்கையிலும் சுழல்கதிரைகளிலும் வாழும் இவர்கள் வாழப்போகும் மீதி நாட்களிலாவது மகிழ்ச்சியாக வாழ இவர்களுக்கு நேசக்கரம் கொடுங்கள் உறவுகளே...? ஒரு நோயாளிக்கு மாதாந்தம் இரண்டாயிரம் ரூபா பெறுமதியான அன்றாட சீனி, தேயிலை,சவர்க்காரம் போன்ற சில தேவைகளை நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் எங்கள் உறவுகளுக்கு உதவுங்கள். இவர்களில் பெரும்பாலானோர் படுக்கைப்புண்களாலும் காயங்களாலும் அவதியுறுகின்றனர். இந்த நடமாட முடியாத சிலரது படங்களை இங்கே இணைக்கிறோம்.
Sunday, July 18, 2010
Sunday, July 11, 2010
பெற்றவருமில்லை ஒற்றைக் கையுமில்லை நேசக்கரம் கொடுப்பீரா உறவுகளே...?
இன்றைய குரலுக்குரியவனுக்கு அம்மாவும் அப்பாவும் யுத்தத்தில் இறந்துபோனார்கள். 10 வயதிலிருந்து இவன் வாழ்ந்தது தனிமைதான். கடந்தவருடம்வள்ளிபுனம் என்ற பகுதியில் விழுந்த எறிகணையொன்று இவனது வலதுகையையும் இருந்த இடம் தெரியாமல் சிதைத்துப்போனது.இன்று இந்த 25வயதுஇளைஞன் தனது வலது கையை தோள்பட்டையுடன் இழந்துபோன நிலையில்வாழ்கிறான்..
Sunday, July 4, 2010
11வயதில் புலியானவன் இரு கண்களையும் ஒரு கையையும் இழந்த ஒரு போராளி இவன்
11வயதில் புலியாகியவன் 17வயதில் தன்னிரு கண்களையும் ஒரு கையையும் இழந்து போனான். இன்று 31 வயது இவனுக்கு. வெற்றிகள் தந்து எங்களை வீரத்தின் அடையாளங்களாக்கிய இவர்கள் இன்று ஒரு நேர உணவுக்கே அல்லாடுகி்றார்கள். இரு கண்களையும் ஒரு கையையும் இழந்து இன்று உதவிகள் எதுவுமற்ற நிலையிலும் தன்னம்பிக்கையுடன் விவாசயம் செய்ய ஒரு தண்ணீர் இயந்திரத்தைக் கேட்கிறான். இவனது குரலைக் கேளுங்கள்.....யாராவது கருணை மனம் படைத்தோர் இவனுக்குக் கைகொடுங்கள்.
Subscribe to:
Posts (Atom)