Showing posts with label #நிழற்குடை. Show all posts
Showing posts with label #நிழற்குடை. Show all posts

Saturday, April 2, 2022

நிழற்குடை சிறுகதைத் தொகுதி வெளியாகியுள்ளது

 எனது முப்பது சிறுகதைகள் அடங்கிய *நிழற்குடை * சிறுகதைத் தொகுதி வெளியாகி இருக்கிறது. இந்த நூலை வெளியீடு செய்த தடாகம் பதிப்பகத்தினருக்கு மனம் நிறைந்த நன்றி.

2009 தொடக்கம் 2016 காலப்பகுதியில் எழுதப்பட்ட போரின் கதைகள்.


ஒன்லைனில் புத்தகத்தை வாங்கலாம்.

கீழ் வரும் இணைப்பில் சென்று பாருங்கள் :

https://www.panuval.com/nizharkudai-izhathu-sirukadhaikal-10020436

2009ஆம் ஆண்டு மே மாதம் நடந்த ஈழப்போரில் வாழ்வும் வளமும் பறிக்கப்பட்டு நிர்க்கதியான ஈழத்து மக்களின் துயரங்களும், வேதனை இந்தச் சிறுகதைகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

 இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு சந்ததியின் பெருவாழ்வு. இந்த எழுத்துகள் மூலம் ஒவ்வொரு கதைமாந்தர்களுக்கான ஒரு நிழந் குடையை இந்தச் சிறுகதை வழங்கியிருக்கிறது. 

யுத்தத்தின் சத்தங்கள் நின்று போனதே தவிர அந்த மனிதர்களின் வாழ்வு போராட்டம் நிறைத்தே கடந்துகொண்டிருந்த நேரத்தில் நிழல் கொடுத்து அவர் களைத் தாங்கிய கதைகள் இவை. 

போரின் பின்னான காலத்தின் துயரம் என்பது உயிர்களை எப்படி வதைக்கும் என்பதன் சாட்சிகளாக 'நிழற்குடை' உயிரும் உணர்வும் கலந்திருக்கிறது.