Saturday, August 22, 2009

என்னை விடுங்கோ என்ர புள்ளை அம்பேபுஸ்ஸவில….


அம்மா….அம்மாஅம்மா….எனக்குஅம்மாட்:டைப் போகவேணும்….. அவள்கதறக்கதற கொடிய கரங்கள் அவளைஇழுத்துக் கொண்டு போகின்றன……என்ரபிள்ளை….என்ரை பிள்ளையைவிடுங்கோ……என்ற அவளதுகதறலையும் கேட்காமல் கார்த்தினிஇழுபட்டுக் கொண்டு போனாள்….அவள்நாளுக்கு 3தரம் மாற்றிக்கொள்ளும்உடுப்பும் , பாதணிகளும் , அவள் பாவித்த பவுடர் பேணிகளும் இன்னும் பிறஅவளது பாவனையின் மீதங்களான எல்லாம் அந்தக்கால்களுக்கு அடியில் நசிந்துநொருங்குகிறது.

கமலினிகமலினி….என்ன….பக்கத்தில் படுத்திருந்த கணவனின் குரல் அவளைமீளவும் இழுத்து வருகிறது நிசத்துக்கு. என்னாச்சி….என்ன…..அவனது ஆதரவானஅணைப்பில் கரைந்து கண்ணீரால் நனைக்கிறாள் அவனை…..
என்ர பிள்ளையப்பா…..என்ரை பிள்ளையை யாரோ…..அதற்கப்பால் அவளால் எந்தவார்த்தைகளையும் உச்சரிக்க முடியாமல் விம்மல் பெலத்து……என்ரபிள்ளை…..என்ர பிள்ளை…..எனப் பெருங்குரலெடுத்து அழுகிறாள்.

என்னாலை தாங்கேலாதாமப்பா…..நான் செத்துப்போப்போறன்……என்ரைபிள்ளையெங்கை கஸ்ரப்படுறாளோ தெரியேல்ல…..என்ரை பிள்ளைபடிக்கவெண்டெல்லோ விட்டனான்…..என்ரை பிள்ளையைஎங்கையிருக்கிறாளோ……சேவை சேவையெண்டு ஊருக்கு எவ்வளவைச்செய்தன்…..எனக்கேனப்பா இப்பிடியொரு விதியைக் கடவுள் தந்தான்……?
நீ செய்த நன்மையள் எங்கடை பிள்ளையைக் காப்பாற்றும்…..நீயோசிக்காத…..அவள் எப்பிடியும் வருவாள்…..சிவன் கோவில் சாத்திரிசொன்னமாதிரி 6மாதத்தில திரும்பி வருவாள் பாரன்…..அவளை ஆறுதற்படுத்தத்தன்னால் இயன்ற எல்லாவற்றையும் சொன்னான். அவள் தானாக அழுகையைநிறுத்தும் வரை அவன் அமைதியாய் இருந்தான்.
அவள் சொல்வது போல செத்துப் போய்விடலாமா ? என்றுதானிருந்தது. அப்பாஅப்பா எனக் கார்த்தினி உலவிய வீடும் விறாந்தையும் வளவும் இன்று அவளின்றிஒரு சுடுகாட்டின் வாசனைகளைத் தன்னோடு சேமித்துக் கொண்டிருந்தது. அவள்இருப்பாள் என்ற நம்பிக்கையை அவன் தொலைத்துவிட்டான். கமலினிக்காகசாத்திரங்களையும் கோவில்களையும் சாட்டுக்கு வைத்திருப்பதைத் தவிரவேறெந்த நம்பிக்கையும் அவனுக்கில்லை.

கமலினியின் பெரியக்கா நோய்வாய்ப்பட்டிருந்த நேரம் முல்லைத்தீவுக்குகார்த்தினியையும் கூடவே அழைத்துப் போனபோது, தன்னுடன் அவளைவைத்துக் கொள்வதாக பெரியக்கா கேட்டதும் மறுவார்த்தையின்றிக் கார்த்தினிசொன்னாள். நான் பெரியம்மாவோடை நிக்கிறன் நீங்க வவுனியாவுக்குப்போங்கோ….என இவர்கள் வவுனியா திரும்ப அவள் அங்கேயே தங்கினாள். அவளை அங்கே விட்டுவிட்டு வர இவனுக்கு முடியாது என்பதை யாருக்கும்சொல்லவில்லை.

இடையிடை இவர்கள் போய்ப் பார்த்து வந்தார்கள். கமலினி பணியாற்றியதொண்டு நிறுவனத்தின் அலுவலாக அல்லது ஏதாவதொரு தேவைக்காகஇராணுவத் தடையரண்கள் தாண்டி முல்லைத்தீவு போய்வர ஏதாவது அலுவல்இருந்து கொண்டுதானிருந்தது. அக்காவுடன் அவள் நன்றாக இருப்பாள் என்றநம்பிக்கை மலையளவு அவளுக்கு இருந்தது. அந்த நம்பிக்கைகளோடுஇருந்தவளுக்கு 9நெடுஞ்சாலை தொடர்புகளற்று முல்லைத்தீவுடனானஅவளது தொடர்புகளும் அற்றுப்போய்…..போர் உக்கிரமாகியது. எப்போதாவதுபெரியக்கா வந்து அவள்பற்றி சொல்லும் தகவல்களுடன் மாதங்கள் விரைந்ததை மாதத்தில் ஒரு நாள்…..
பெரியக்கா அவளது வேலையிடத்துக்கு அவசரமாக அழைத்தாள். ஐயோ பிள்ளைஎன்னைக்குறை சொல்லாதை நானொண்டும் செய்யேலாமக்கிடக்கு….நான்தேடாத இடமில்லை…..இஞ்சை கனபிள்ளையள்இப்பிடித்தான்……வீட்டுக்கொருத்தர் என்ற கதைமாறி இளவயதினர் எல்லாரையும்கட்டாயமாச் சேர்க்கினம்….என்ரை மூத்தவனையும் ரண்டாவதையும் கொண்டுபோட்டினம்….அதுதான் சரி என்ரை பிள்ளையள்….நீ என்னை நம்பிவிட்டிட்டுப்போன உன்ர பிள்ளையையும் குடுத்திட்டனே….என்ரை குஞ்சு இரவுநித்திரையாக் கிடந்தவளணை வந்து கூப்பிட பிள்ளை மாட்டனெண்டு அழுதுகுழற அதையும் கேக்காமல் கொண்டு போட்டினம்……பெரியக்கா சொல்லிமுடித்தாள்.

கனவுபோலவும் அது பெரியக்கா இல்லை வேறையாரோ போலவும் நினைக்கவேமுடியவில்லை. பிள்ளையில்லையென்றதை ஒருநாளும் அவள்நினைத்திருக்கவேயில்லை. தன் ஆயுசு முழுமையும் தனது மகள் கூடவேஇருப்பாளென்ற கனவுகளும் , இவள்போல அவளும் பெண்கள் சமூகத்தின்முன்னேற்றத்துக்காக உழைப்பாள் என்றெல்லாம் எண்ணியிருந்த நினைப்புகள்மீதெல்லாம் சுனாமிப்பேரலை அடித்துச் சென்ற ஆயிரமாயிரம் பேரின்கனவுகளின் சிதைவு போல அவள் உடைந்து சிதிலமாகினாள். 15வயதே நிரம்பியதனது ஆசைமகளின் ஒவ்வொரு வளர்ச்சியின் பின்னும் அவள் மகிழ்ந்ததருணங்களெல்லாம் தவிடுபொடியாகி……

தினம்வரும் சாவுச்செய்திகளுக்குள் தனது ஒற்றைமகளின் செய்தி வரக்கூடாதுஎன தினமும் கடவுளை வேண்டிய பின்னர் தான் செய்தி படிப்பாள். வேலையிடத்திலும் தினமும் அழுகையும் துயருமாய் அவளதுபொழுதுகள்…..அன்றொருநாள் அவளது நிறுவனத்தின் இயக்குனர் வந்துசொன்னார். உங்கடை மகள் இறந்திட்டாவாம்…..பெரியக்கா சொன்னதாகசொன்னார். அந்த இடத்திலேயே அவள் ஐயோவென்று அலறியழுதாள். தொழில்சார் நண்பர்கள் முதல் அயல் அக்கம்பக்கம் உறவுகள் என எல்லாரும்வீடுதேடி வந்து துக்கம் விசாரித்துச் சென்றபின்னும் தனது மகள் உயிருடன்இருக்கிறாள் என்ற நம்பிக்கையைக் கைவிடாமல் சாத்திரம் கேட்டாள். சிவன்கோவில் சாத்திரியின் சாத்திரம் பொய்க்காதென்ற நம்பிக்கையே அவளைவாழவைத்துக் கொண்டிந்தது.

போர் உக்கிரமாய் நிகழ்ந்து கொண்டிருந்த பகுதிகளிலிருந்து மக்கள் தினம்காயங்களுடனும் சாவுகளுடனும் வவுனியா நகருக்குள் வந்துகொண்டிருந்தார்கள். உதவிக்கென அவளது நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்டபணியாளர்களுடன் தானும் மருத்துவமனைகள் மற்றும் காடுகள் வெட்டப்பட்டுஅவசர அவசரமாய் அமைக்கப்பட்ட கொட்டகைகளுக்குச் சென்று மக்களைச்சந்தித்து அவர்களுக்கான உதவிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.

வேலை தவிர்ந்து கிடைக்கும் விடுமுறை நாட்களான சனி ஞாயிறுகளில்வைத்தியசாலைகளுக்குச் சென்று தனித்தனியே போரால்பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனைகள் உதவிகள் என தனதுஓய்வையெல்லாம் பாதிக்கப்பட்டவர்களுக்காக செலவிட்டுக் கொண்டிருந்தாள்.

ஒரு சனிக்கிழமை வவுனியா பொதுவைத்தியசாலையில் கடந்தவாரத்தில்சந்தித்த யாருமற்ற 4பேருக்கு உணவும் உடைகளும் கொண்டு போயிருந்தாள். வைத்தியசாலையின் வெளிவிறாந்தையில் பெரியத்தான் அடையாளங்கள்யாவும் மாறி சவரம் செய்யப்படாத நரைத்ததாடியும் ஒட்டியொடிந்த உடம்புமாகஇருந்ததைக் கண்டாள். ஓடிப்போய் பெரியத்தானைக் கூப்பிட்டாள். பெரியத்தான்அவளைத்தனக்கு அடையாளம் தெரியும் என்பதற்கான எந்தவிதமானஅசுமாத்தமும் இல்லாமல் வெறித்தபடியிருந்தார்.

பெரியத்தானின் மிடுக்கும் மடிப்புக் கலையாத வெள்ளை வேட்டியும் சேட்டும்புழுதியில் குளித்திருந்தன. போர் நிகழ்ந்த பகுதியொன்றின் பாடசாலை அதிபரானபெரியத்தானின் அத்தனை மிடுக்கும் ஒடுங்கி ஒரு பிணம்போல பெரியத்தான்இருந்தார். மருத்துவர் ஒருவர்தான் சங்கதி சொன்னார். பிள்ளைகளைப்பிள்ளைபிடியில் கொடுத்ததிலிருந்து இப்படித்தானாம்….அதேவைத்தியாசாலையில் பெரியக்கா இருகால்களையும் இழந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் சொன்னார்.

பெரியக்கா இருக்கும் பகுதிக்கு ஓடிப்போனாள். அந்தக்காலத்தில் பெரியக்காவைநடிகை சுஜாதா என்பார்கள் ஊரில். அத்தகைய ஒரு அழகு அவள். அந்துப்பெரியக்கா கன்னங்கரேலனெ்று கறுத்துக் காய்ந்து முடமாகிப்போன தனதுகால்களைத் தடவிக்கொண்டிருந்தாள். அவள் அருகில் போனதன் பின்னர்தான்தெரிந்தது. பெரியக்காவுக்கு அடிவயிற்றிலும் பலத்தகாயம் என்பது. பெரியக்காவும் அவளும் சிலநிமிடங்களுக்கு பேசவேயில்லை. அழுகைதான்இருவரையும் அள்ளித் தின்றது.

நாங்கள் உயிரோடை வருவமெண்டே நினைக்கேல்லப் பிள்ளை…..ஒவ்வொருஇடமா ஓடியோடி புதுமாத்தளனில ஆமீட்டை மாட்டீட்டம்…..ஐயோ கடவுளாரேநாங்கள் பட்ட துயரை என்னெண்டு சொல்றதெண்டு தெரியேல்ல….பெரியக்காவிசும்பியழுதாள்.

அக்கா…, என்ரை பிள்ளையெங்கையக்கா…., அவளின்ரை பிணத்தைத்தந்தவையோக்கா….., முதல் சொன்னவை பிள்ளை சண்டையிலசெத்துப்போச்செண்டு பிறகொருக்கால் புதுமாத்தளனுக்கு வரேக்க அவள்கையில துவக்கோடை நிண்டதைக் கண்டம். ஓடிவந்து கதைச்சது பிள்ளை. உன்னைத்தான் பாக்க வேணுமாப்போலையிருக்கெண்டு அழுதவள். கையிலகிடந்ததை அங்கினை எறிஞ்சிட்டு வாவெண்டு எங்களோடைவாவெண்டன்…..பிள்ளை பக்கத்தில நிண்டவையைப் பாத்திட்டு அழுதது. எங்களைப் பாத்துப்பாத்துப் பிள்ளை போனது…..இப்பவும் கண்ணுக்குள்ள நிக்குதுமோன….
கடைசிவரையும் நம்பினம்….ஒரு நல்ல முடிவு கிடைக்குமெண்டு…..ஆனாலட்சம் பேரையும் இப்பிடி நடுத்தெருவில விட்டிட்டு எங்கடை பிள்ளைளையும்காவு குடுத்திட்டு கடைசியில 13வயதுக்கு மேற்பட்டதுகள் எல்லாத்தையும்கொண்டு போய் இப்ப தமிழனெண்டா சிங்களவன் தலையிற மிதிக்கிறநிலமையில விட்டிட்டுப் போட்டினம்…..என்ரை மூத்தவன்காயப்பட்டவன்….தானே சயனைட்டைத் திண்டு செத்துப்போனான்….மற்றவன்எங்கையெண்டு தெரியாது….சின்னவள் உங்கை பம்பைமடுவிலஇருக்கிறாள்….உன்ரை பிள்ளையும் முள்ளிவாய்க்கால் முடிவோடை ஆமிகொண்டுவந்த பிள்ளையளோடை வந்திருக்கும்…….

அவளால் பெரியக்கா சொன்ன எதையும் ஜீரணிக்க முடியவில்லை…..நாடும்வேண்டாம்…..போரும் வெண்டாம்….ஒண்டும் வேண்டாம்…..எங்கடைபிள்ளையள் போதுமெனக் கத்திக்குழறினாள். தன்னை மறந்து தலையிலடித்துநெஞ்சிலடித்துக் கத்தினாள். அவளை ஆறுதற்படுத்தி அழுகையை நிறுத்த வைத்தபெண் மருத்துவர் சொன்னாள். உங்களைப்போலையான ஆயிரமாயிரம்அம்மாக்களின் கண்ணீர்தான் எங்கடை நாட்டை நனைச்சுக்கொண்டிருக்குது…..முகாம்களிலயும் ஆசுப்பத்திரியளிலயும் எல்லா இடமும்பிள்ளைகளைத் தேடுற அம்மாக்களும் உறவுகளும் தான் நிரம்பிவழியினம்….யோசிக்காதையுங்கோ உங்கடை பிள்ளை எங்கையெண்டாலும்உயிரோடை இருப்பா….என்ற அந்த வார்த்தைகள் சின்னதொரு தெம்பைக்கொடுத்தது.

தமிழருக்கான தேசம் வேண்டும் அங்கேதான் தமிழினம் நிம்மதியுடன்வாழமுடியும் என்ற அசையாத நம்பிக்கையோடிருந்த பலலட்சம் தமிழர்கள்போல அவளும் தமிழீழவிடுதலையை தலைமையை நம்பியிருந்தாள். அந்தநம்பிக்கையின் சிகரத்தையே கொன்றுவிட்டதாய் ஒளிக்காட்சிகள் படக்காட்சிகள்காண்பித்தபோது எதையும் நம்ப முடியாதிருந்தது.

சிறுகச்சிறுகச் சேர்த்த பலமும் படையணிகளும் சிதைந்து பத்தாயிரத்தைத்தாண்டிய போராளிகள் சரணடைவு என்ற தகவல்களும் உலக வல்லரசுகளின்கால்களில் மிதிபட்டு எல்லாம் போய்விட்டது. இனிச்சில நூற்றாண்டுகளுக்குத்தமிழினம் எழுந்து நிமிர முடியாமல் அனைத்தும் அனைவரும் எல்லாளனின்வீழ்ச்சியுடன் மாண்டுபோய்விட்டது.

பிள்ளைபிடியில் பறிபோன தனது ஒற்றைப்பெண் கார்த்தினியைத் தேடிமனிதவுரிமை அமைப்புகள் செஞ்சிலுவைச்சங்கம் வரை மகளின் படமும்விபரங்களும் எழுதியெழுதிக் கொடுத்தே கைகள் ஓய்ந்துவிட்டன…..எங்கோஇருக்கிறாள் எனது மகள்….என்ற நம்பிக்கையை சிவன் கோவில் சாத்திரியிடம்சென்று வாரம் ஒருதரம் கேட்டு வருவாள். சிவன்கோவில் சாத்திரியின்வாக்குப்போல தென்பகுதியில் மகள் இருக்கிறாள் என்ற நம்பிக்கையைகடந்தவாரசண்டேலீடர்பத்திரிகையில் வந்த கட்டுரை மெய்ப்பித்ததுபோலிருந்தது.

அம்பேபுஸ்ஸ நகரில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் இருக்கும் சிறுமிகள்எனப்போடப்பட்டிருந்த படத்தில் கன்னப்பாட்டுக்குப் பார்த்தபடியிருந்த மஞ்சள்சட்டையணிந்திருந்த பிள்ளை இவளது கார்த்தினி போலிருந்தாள்.

அம்பேபுஸ்ஸவிலிருந்த சிறுமிகளின் கதைகளில் ஒரு சிறுமி சொன்னாள்….,

இந்தக் காம்பை விட்டு வெளியே சென்ற பிறகு என்ன செய்வதாக உத்தேசம்?’ என்று மீண்டும் கேட்ட போதுநான் என் அம்மாவிடம் போக வேண்டும். எனக்குஎன் அம்மா வேண்டும்என்பதைத் தவிர வேறொன்றும் சொல்லவில்லை. அம்மாஎன்ற அந்த ஒரு சொல்லைத்தான் அங்கிருக்கும் சிறுமிகள் அனைவருமேதிரும்பத் திரும்ப சொல்கிறார்கள்.

அந்தச் சிறுமி தனது மகள்தான் என எல்லாருக்கும் சொன்னாள். அயல்முன்வீடென எல்லாருக்கும் அந்தச் செய்தியில் வந்த வரிகளை வாசித்துக்காட்டினாள். தன் மகள் கிடைத்துவிட்டாளென்று உள்ளுக்குள் பேருவகையில்மிதந்தாள்.

இரவு வேலையால் திரும்பிய கணவனை வாசலில் போய் வழிமறித்துச் செய்திசொன்னாள். ஒற்றைப்பிள்ளை போதுமென்று அடுத்த குழந்தையை விரும்பாதஅவர்களது கனவுகளின் ராசகுமாரியாகச் சுற்றிச்சுற்றித் திரிந்த பிள்ளையைமீளவும் காணலாம் என்ற நம்பிக்கையோடு செய்தியையும் படத்தையும்பார்த்தான். அந்த மஞ்சள் சட்டையணிந்தவள் அவர்களது கார்த்தினியில்லை அதுவேறுயாரோ போலிருந்தது. அதைச் சொல்லி அவளைக் கலங்க வைக்காமல்……. நான் சொன்னனெல்லோ நீ செய்த பணியள் எங்கடை பிள்ளையைக்காப்பாற்றுமெண்டு…. பாத்தியோ…. கடவுள் இன்னும் இருக்கிறார்…..எங்கடைபிள்ளை கிடைப்பாள்…..

படுக்கைக்குப் போனவள் நெடுநாளின் பின் அன்று அமைதியாய் உறங்கிக்கொண்டிருந்தாள். அவனுக்கு நித்திரை வரவில்லை. தலையணைகை்குப்பக்கத்தில் அவள் வைத்திருந்த ‚‘சண்டேலீடர்பத்திரிகை எடுத்து விறாந்தைக்குள்கொண்டுபோய்ப் பார்த்தான். அவள் தனது மகள் என அடையாளம் சொல்லியபிள்ளை அவர்களது கார்த்தினியில்லையென்பது புரிந்தது. இதை அவளுக்குச்சொல்லி அவள் குழம்பி அழுகையும் துயருமாய் அவளிருக்கும்துயரக்கோலத்தைப் பார்க்கும் தைரியம் அவனுக்கில்லை. அவளது நம்பிக்கைகள்அவளுக்குரியதாகட்டும்……கனவு கண்டு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியவள்மீளவும் உறங்கிப்போனாள்…..

கூரையைப் பிய்த்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்துவிடுமாப்போலிருந்தது மழை. இடியும் மின்னலும் மாறிமாறி யன்னலை உதைக்கும் காற்றோடு உள் நுளைந்தகுளிரின் இனிமையை இதயம் நுகர விரும்பினும் எதனுடனும் ஒட்டவோஉறவாடவோ மனசில் இடமில்லை. அர்த்த இராத்திரிகளில் வந்து தொலையும்பேய்களும் பிசாசுகளுமாக கனவில் திளைக்கும் தருணங்களையெல்லாம்தகர்க்கிறது கனவு.

கார்த்தினியின் நினைவுகளைத் துரத்த முடியாமல் அவளது படங்களும் அவளதுபுத்தகங்களும் அவள் ஞாபகங்களையே நிறைந்த விறாந்தையின் ஒருபக்கயன்னலைத் திறந்துவிட்டு மழையின் இரைச்சலையும் மின்னலின்ஒளிக்கீற்றையும் இடியின் ஓசையையும் கேட்டுக் கொண்டிருந்தான்.

தலைவெடித்துவிடும் போல மழை மின்னல் இடி எல்லாவற்றையும் தாண்டிக்கார்த்தினி எல்லாவற்றிலும் நிறைந்திருந்தாள். அவளில்லா நாட்களை அவள்இல்லையென்ற உண்மையை யார் வந்து சொன்னாலும் கமலினி நம்பமாட்டாள்ஏன் இவனாலும் தான் இயலாது……ஏன் தமிழருக்கு இந்த விதி…? என்ன பாவங்கள்எங்களை வதைக்கிறது….? கேள்வி மேல் கேள்விகள்…..எதற்கும் அவனிடம்விடையில்லை…..

பின் வளவிலிருந்து மாமரக்கிழைகள் முறிந்து விழுந்துகொண்டிருந்தன…..மரங்களில் இருந்த கோழிகளும் அடித்துவிழுந்துதாழ்வாரத்தில் ஒதுங்கின…..முற்றத்தில் கிடந்த முயற்கூட்டின் தாழ்வாரத்தில்கிடந்த நாய் ஊழையிட்டுக் கொண்டு போட்டிக்கோவில் வந்துபடுத்தது……படுத்திருந்த நாய் வாசலை நோக்கிக் குரைத்துக் கொண்டுஓடியது…..சண்டை முடிந்ததென்று சொல்லப்படுகின்ற இந்த நாட்களில் வாசலைநோக்கி நாய் குரைத்துக் கொண்டு ஓடியது அச்சமாயிருந்தது. யாராவது இயமதூதர்கள் வந்தாலும் என்ற பயத்தையும் மறந்து அவன் கார்த்தினியின்நினைவுகளோடு கரைந்திருந்தான்……

வாசலுக்கு ஓடிய நாய் ஓடிவந்து இவனைப்பார்த்துக் குரைத்தது…..யாரோவாசலடியில் நின்று அழுவது போலிருந்தது……யாரது…..எனக் குரல்கொடுத்தான்……அது நான்தானப்பா…..கமலினி குரல்கொடுத்தாள்…..படுக்கையறையில் கிடந்தவள் எப்படி வாசலுக்குப் போனாள்….? வாசலுக்கு ஓடிப்போனான்….இரவு உடையுடன் படலையின் பூட்டை கமலினிதிறக்க முயன்று கொண்டிருந்தாள்…..கமலினி….என்ன ? எங்கை போப்போற இப்பநான் பிள்ளையைக் கூட்டிவர அம்பேபுஸ்ஸவுக்குப் போப்போறன்….உங்கடைசயிக்களை எடுங்கோ ரண்டுபேருமாப்போட்டு வருவம்…..
அவனுக்கு அழவா இல்லை அவளை ஆறுதற்படுத்தவா எதுவுமேபுரியவில்லை…..

அந்தப்பெரு மழைக்கால் அவளைப் பிடித்து இழுத்துக்கொண்டு விறாந்தைக்குள்நுளைந்தான்…..கமலினி பெரிய சத்தமாய் கத்தினாள்…..என்னைவிடுங்கோ….என்ரை பிள்ளை என்னை எதிர்பாத்துக் கொண்டிருக்கிறாள்…..நான்அம்பேபுஸ்ஸக்கு போப்போறேன்…..அவனுக்கு என்ன செய்வதென்றேபுரியவில்லை….தன்னால் சொல்ல முடிந்த சமாதானத்தைச் சொல்லியும் அவள்கேட்காமல்…., நான் அம்பேபுஸ்ஸக்கு போப்போறேன்…..என்றபடியிருந்தாள்…….
19.08.09

Wednesday, August 19, 2009

எங்கிருக்கிறாய் அல்லது எப்படியிருக்கிறாய்….!

மே 17 இன் பின்னரான முடிவில்
எங்காவது ஒரு முகாமில் நீ அடைந்திருப்பாய்
ஆராவது கொண்டு வரும் மொபைலில்
தொடர்பு கொள்வாய்
இருக்கிறேன்……,
என்ற செய்தி வரும்
சந்திப்போம் மீண்டுமெனக் காத்திருந்த காத்திருப்பு
காலாவதியாகிறது தோழா…..

நீண்டநாளின் பின்னர் நேற்றிரவு வந்த அழைப்பில்
உன் அக்கா பேசினாள்…….
‚‘அவனைப்பற்றி ஏதும் அறிஞ்சியளோ…..?
எங்கினையும் இருந்தா என்ர தம்பி தொடர்பு கொண்டிருப்பான்….
எங்கையிருக்கிறானோ‘‘…..? ஏதாவது தெரியுமோ….?

அவளது இனிமைக்குமாறான கதையிலிருந்தும்
அம்மாவின் வளமைக்கு மாறான பேச்சிலிருந்தும்
நான் புரிந்து கொள்வது…..
இல்லையோ நீயென்று அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய்
நம்பத் தொடங்குகிறார்கள்……
அதிகம் கவலையுறுகின்றார்கள் என்பதைத்தான்…..

என்னிடம் எந்தவிதமான நம்பிக்கை கொடுக்கும்
வார்த்தைகளோ அறிதல்களோ இல்லையென்பதை
எப்படிப் புரிவிக்க அவர்களுக்கு…..?
ஏதோ முற்பிறப்பின் தொடர்போல
உன்பற்றிய விசாரணைகள்
என் வீடுவரை வியாபித்துக் கிடக்கிறது…..

சத்தமில்லாமல் எங்காவது சரணடைந்தாயோ இல்லை
சாவைக்கட்டிய குப்பியில் உன் சரித்திரத்தை முடித்தாயோ….?
இல்லது புலத்திலிருந்து மீண்டும் போராடுவோம்
என்ற கதைவிடுவோர் யாரையாவது நம்பினாயோ….?
இல்லை கடைசிநாள் களமுனையில் புதையுண்ட
ஆயிரமாயிரம் தோழர்களோடு நீயும்
நசியுண்டு போனாயோ…..?
எந்த முடிவையெடுக்கத் தோழனே…..?

இருக்கிறாயா….? இல்லையா…..?
விறாந்தையில் தொங்கும் உனது நிழற்படத்தை
சாமியறைக்கு மாற்றிச் சோகம் கொள்ளவா…..?
ஏதாவதொரு சமிஞ்ஞை எட்டுமா தோழனே….?

மூன்றுமாதம் முடிந்தும்
இன்னும் நீ மறைவாயா இருக்கிறாய்….?
தினம் கொல்லும் உனது நினைவுகள்
தீர்வொன்றை எடுப்பதற்காயினும்
ஓர் முடிவு எங்காவது நீயிருந்தால் எழுதியனுப்பு…..!
எங்கிருக்கிறாய்……? அல்லது எப்படியிருக்கிறாய்…..?
19.08.09

Monday, August 17, 2009

ஆட்காட்டி குருவியின் கண்ணீர் கவிதையாகின்றது

வேதனை சுமக்கும் இரவுகளில் இருந்து
ஒரு சொட்டு
கண்ணீர்
கவிதையாகின்றது

கேட்கின்றதா உங்களுக்கு.....

தொடர்ந்து ஒலிவடிவில் கேட்க இங்கே அழுத்துங்கள்.

Saturday, August 15, 2009

அப்பாப் பூனை

வேர்கள் துளிர்க்கும் தமிழீழப்பெண் சிறுகதைத் தொகுதியிலிருந்து....ஒலிவடிவில் ஒருகதை.
(5வருடம் முதல் ஒலிவடிவமாகியது)

ஒரு சிறுவனின் உள்ளத்து உணர்வுகள். தந்தையின் மரணநிகழ்வில் நின்றபடி அவன் இரைமீட்கும் சிறந்ததொரு கதை.


கதையை நேரடியாகக் கேட்ட இங்கே அழுத்துங்கள்.

கதையை தரவிறக்கம் செய்து கேட்க இங்கே அழுத்துங்கள்.

Friday, July 31, 2009

என் ஞாபகப்பதிவிலிருந்து மீள் நினைவொன்று

)ஏற்கனவே சில வருடங்கள் முன்னர் எழுதப்பட்ட ஞாபகம் இப்போது மீளவும் பதிகிறேன்)


அந்தவொரு இரவு அதிர்ந்த வேட்டுக்கள் , ஆட்களைத் தின்ற எறிகணைகள் எல்லாமே அடுத்தநாள் சமாதிகோவிலடி, குரும்பசிட்டி , கட்டுவன் பகுதிகளையும் இராணுவம் ஆக்கிரமித்துக்கொள்ள எங்கள் ஊரில் வடக்குப்பகுதியும் வெறிச்சோடியது. புதுமைகளையெல்லாம் அள்ளித்தந்ததாகச் சொல்லப்படும் சிவகாமியம்மனும் , வயிரவரும் , நாகபூசணியம்மனும் தனித்து நிற்க நாங்கள் பிரிந்து தூரமாகிப்போனோம்.

அன்று காலையே வசாவிளானிலிருந்து எறிகணைகள் ஏவப்பட்டுக் கொண்டிருந்தது. அம்மா கடையைத்திறந்தபடியேயிருந்தா. நாங்கள் தட்டுக்குக்கீழ் குந்தியிருந்தோம். எறிகணை ஏவும் சத்தம் சக்கெனமுன்னம் அடுத்த சத்தம் எந்த உயிரையாவது அல்லது ஏதாவது ஒரு வீட்டில் அல்லது எங்காவது ஒரு நிலத்தில் வீழ்ந்து வெடிக்கும். முத்தர்வளவு , காளிகோவிலடியெல்லாம் எறிகணைகள் விழுவதாக அந்தப்பக்கத்து மக்கள் தயிலங்கடவைக்கும் , கொலனி , சுன்னாகம் , இணுவில் , உடுவில் என ஓடிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு எறிகணையின் சத்தமும் எம் இதயத்தில் விழுவது போலான தவிப்பும் அச்சமும்.....காலைசாப்பிட்ட பாணைத்தவிர வேறு எதுவும் இல்லை. மதியம் தாண்டி மாலை நேரம் கொஞ்சம் சத்தங்கள் ஓய்வு காணத்தொடங்கியது. வியர்வையில் குளித்து பயத்தில் பிதுங்கிய விழிகளும் கொஞ்சம் சிரிக்க வீதி ஆட்களால் ஆரவாரித்துக் கொண்டிருந்தது.

இளையதம்பியும் , இளையதம்பியின்ரை மூத்தபெட்டையும் செல் விழுந்து செத்துப்போட்டுதுகளாம்.....!

அந்தச்செய்தி என் செவிகளிலும் வந்து விழுந்தது. புன்னாலைக்கட்டுவன் நாச்சிமார் கோவிலடிக்குச் சற்றுத்தள்ளியிருக்கும் அந்த ஒழுங்கையும் பதுமநிதியும் அவள் அக்காவும் என் கண்ணில் வந்து நின்றார்கள். என்தோழி பதுமநிதியின் வீட்டிலும் இடிவிழுந்து அவள் அக்காவும் , அப்பாவும் செல்லடியில் செத்துப்போனார்கள். பதுமநிதியும் அவள் குடும்பமும் இந்நேரம் செத்தவீடு கொண்டாடிக் கொண்டிருக்கும்.

அந்தச்சாவுச்செய்தியிலிருந்து மீண்டௌ முன்னம் அடுத்தொரு துயர் எங்களைக் காவுகொண்டது. அதுவொரு மதியம் வானவெளியை உலங்கு வானூர்தியொன்று உழுது கொண்டிருந்தது. அழகிய நீலவானம் அந்த வானூர்தியின் இரைச்சலால் அமைதியிழந்து கொண்டிருந்தது. வானையுழுத உலங்குவானூர்தி தான் சுமந்து வந்த துப்பாக்கிகளால் வானைச்சல்லடை போட்டுக்கொண்டிருந்தது. இடையிடையே டொம்.....டொம்....என்ற பெருவெடியோசைச் சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தது. வழமைபோல் அம்மா எங்களை தட்டுக்குக் கீழ் இருத்திவிட்டா. தயிலங்கடவைப்பக்கமாக உலங்குவானூர்தி பதிந்து வேட்டுக்களைத் தீர்த்துக்கொண்டிருந்தது. வானூர்தி தயிலங்கடவைத் தோட்ட வெளியில் இறங்கிறதோவென்றுகூட எண்ணத்தோன்றயது. அந்தளவுக்கு உலங்குவானூர்தியின் இரைச்சல் கேட்டுக்கொண்டிருந்தது. கடவுளே.....எங்களைக்காப்பாற்று....கடவுளே....கேணியடிவயிரவா.....எங்களைக்காப்பாற்று..... உதடுகளிலிருந்து எழுந்த அந்த வேண்டுதல் பொய்க்காது உயிர்தப்ப வேண்டுமென்ற அந்த நேரத்து அந்தரிப்பு எந்தக்கணங்களாலும் உணரப்படாத தவிப்பு அது.

வான் அமைதியையும் குலைத்து எங்கள் இதயங்களையும் கலங்கவைத்த உலங்குவானூர்தி பலாலி நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தது. வெறிச்சுக்கிடந்தவீதி உயிர்த்துக்கொண்டது. தயிலங்கடவை நோக்கி ஆட்கள் ஆரவாரித்து ஓடுவது தெரிந்தது. கடைக்கு வந்த முத்தனின் மனைவி சொன்னாள். மனோன்மணியும் பிள்ளையளும் கெலிகுண்டு போட்டுச்செத்துப்போச்சுதாம். ஏன்.....? என்னண்டு.....? கேட்ட அம்மாவுக்கு அவள் சொன்னாள்.

தோட்டவேலைக்குப்போன மனோன் மத்தியானம் பிள்ளையளுக்குச் சாப்பாடு குடுக்க வந்து சமைச்சுக் கொண்டிருந்ததாம் இளையபொடியன் கெலியைக்கண்டவுடனும் உலக்கையைத் தூக்கிக்காட்டினவனாம். அதைக்கண்ட கெலிக்காறன் சுத்தியடிச்சுச் சுட்டுக்குண்டு போட்டிட்டான். தனக்குத் தெரிந்த தகவலை அவள் சொன்னாள்.

மனோன்....! அந்தப்பெயரின் பின்னாலும் அந்தப்பெயருக்குரிய மனோனன்ரியின் இதயஆளத்தின் கீழ் உறைந்திருக்கும் துயரும் வலியும் அழுதவிழியோடு துயர்களையும் துணிந்து சுமந்து தன் பிள்ளைகளையும் இயலாத கணவனையும் தன்தோழிலேற்றி வாழ்ந்த அவரது வாழ்வு. ஈழத்துப்பெண்கள் பலரது வாழ்விலிருந்து ஒருதுளிதான். ஆனால் அந்த வாழ்வுடன் போராடிய மனோனன்ரியின் வேகமும் சுறுசுறுப்பும் என்னையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மனோனன்ரியின் கணவர் பரஞ்சோதி. குடிக்கே அடிமையானவர். அந்தக் குடியே அந்தப் பரஞ்சோதிமாமாவின் ஈரலைத்தின்று வயிறும் வீங்கி நோயாளியாகி மனோனன்ரிக்குச் சுமையைக்கொடுத்து இயந்திரமாய் மனோனன்ரியின் சிலமணித்தியால ஓய்வையும் வாங்கிவிட்டது. மனோனன்ரியின் மூத்தவள் நாகேஸ்வரி என்வயது. என்னுடன்தான் குப்பிளான் விக்னேஸ்வராவில் படிக்கிறாள். அம்மாவிடம் கடனுக்குச் சாமான் வாங்கும் மனோனன்ரியில் அம்மாவுக்கு நல்ல விருப்பம். கடன்வாங்கினாலும் சொன்ன திகதிக்குத் தந்துவிடும் நாவு மனோனன்ரியினது. சொல்லில் நாணயம் செயலில் துணிவு என எல்லாம் சேர்ந்த மனோனன்ரியின் குடும்பம் சிதைக்கப்பட்டு மனோனன்ரியும் அவரது இளைய மகனும் செத்துவிட்டார்கள்.

ஐயோ என்ர பிள்ளையள்....என்ர பிள்ளயளைக்காப்பாற்றுங்கோ.....! தன் காயத்தின் வலியையும் மறந்து தன் பிள்ளைகளையே காக்க நினைத்த அந்தத்தாயுள்ளம். ஊர் அவர்களைத் தெல்லிப்பழை மருத்துவமனைக்குக் கொண்டு போன வழியில்.....

மனோனன்ரியின் கடைசி மகன் கண்களை மூடி இவ்வுலகிலிருந்து நிரந்தரமாய் பிரிந்து.....

மனோனன்ரியும் மருத்துவமனையில் தன்னுயிர்த்துளியை விடுவித்து விழிமூட....ஒருவீட்டில் இருசாவு....மகள் நாகேஸ்வரி தன் காலொன்றையும் இழந்து.....அம்மாவையும் இழந்து நாகேஸ்வரியும் அவள் தம்பியும்....

உறவுகள் எனச்சொல்ல எத்தனையோ பேர் இருந்தும் மனோனன்ரியும் அவரது கடைசி மகனும் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டு கிரியைகள் செய்யப்படாது நேரே கொலனிச்சுடலையில் தீயோடு எரிந்து சாம்பராகி.....

Thursday, July 23, 2009

உள்ளிருந்து ஒரு குரல்


'உள்ளிருந்து ஒரு குரல்'நிகழ்ச்சியை கேட்ட இங்கே அழுத்துங்கள்

'உள்ளிருந்து ஒரு குரல்'நிகழ்ச்சியைத் தரவிறக்கிக் கேட்க இங்கே அழுத்துங்கள்

(உள்ளிருந்து ஒரு குரல் என்ற கவிதையை
நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். காலத்தை பிரதிபலிக்கும் இக் கவிதையை ஒலிவடிவில் தருகிறோம். எழுதியவரின் பெயர் குறிப்பிடப்படாமையால் கவிதைக்கு உரியவரின் பெயர் சேர்க்கப்படவில்லை. எழுதியவரின் பெயர் அறிந்தால் அஞ்சலிடுங்கள் சேர்த்துக் கொள்வோம்)

Wednesday, July 22, 2009

எப்போதோ எழுதிய ஞாபகம் 1984 இல் ஒருநாள் 2


1984. அது எங்கள் வீட்டிற்கு முருகன் தம்பிவடிவில் வரப்போகிறான் என்ற கனவு. சன்னிதிக்கும் , மாவிட்டபுரத்துக்கு மனமெங்கும் நேத்தி. மூண்டும் பெட்டைக்குட்டி அடுத்ததாச்சும் பெடியனெண்டா அவனுக்கும் நிம்மதி. அப்பாவிற்கு நிம்மதியாம் அடுத்தது பெடியனானால். ஊரில் கனபேரின் கதை இதுதான்.


பெட்டையள் எண்டதாலை அப்பான்ரை ஆக்களுக்கும் எங்களிலை பெரிசா விருப்பமில்லை. அம்மான்ரை ஆக்கள்தான் எங்களிலை நல்ல விருப்பம். அந்தவருடப் பிள்ளையார் திருவிழாவுக்கு நான் விரதம் பிடிச்சு அடியளித்தேன். பிள்ளையாரே எங்களுக்குத் தம்பி பிறக்க வேணும்.....

அம்மா வயிற்றில் குடியிருந்த எங்கள் தம்பி பூமியைப் பார்க்கப்போகும் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த ஆடிமாதத்து வெய்யில் தணிந்து இரவு வந்து ஊர் உறங்கிக் கிடந்தது. வயிரவர் கோவில் ஆலடியில் ஊஞ்சலாடிக் களைத்துப்போன எனதும் என்னூர்ச் சின்னவர்களெல்லாம் உறங்கிவிட்ட இரவு அது. பெரியவர்களின் கதைகள் ஓயவில்லை. அம்பியப்பு வீட்டு வானொலியில் பீபீசி செய்தி கேட்பதற்காக அம்மம்மா , குஞ்சி , அம்பியப்பு , யூகே கிழவன் , வயிரவிமாமா , சிவமன்ரி எல்லாரும் காத்துக் கொண்டிருந்தார்கள்.

நித்திரையில் கிடந்த என்னை எழுப்பிய அம்மா.....
பிள்ளை போய் அம்மம்மாட்டைச் சொல்லிப்போட்டு வா அம்மாக்கு வயித்துக்கை நோகுதெண்டு....அந்த இருளில் அம்பியப்பு வீட்டுக்கு நடந்து போகப்பயத்தில் ஓம் கணபதே நமக சொல்லிக்கொண்டு ஓடிப்போய்ச் சொல்லிவிட்டு ஓடிவந்தேன். அம்மா நாரியைப்பிடிச்சு அழுது கொண்டிருந்தா...அம்மாவைச் சுத்தி நானும் தங்கைச்சிமாரும்....

இரவு பத்துமணிக்கு மேலாகிவிட்டது. அம்மா வேதனையில் துடித்தா....வவியன்மாமா கேணிடியக்குப் போய் புண்ணியன் சித்தப்பாவைக் கூட்டிவந்தார். புண்ணியன் சித்தப்பா மோட்டச்சயிக்கிளில் வந்து இறங்கினார். அம்மம்மா அவசரமாக அம்மாவை தெல்லிப்பழை ஆசுப்பத்திரிக்கு அனுப்ப ஏற்பாடுகளை முடித்து....அம்மாவை புண்ணியன் சித்தப்பா மோட்டசயிக்கிளில் ஏற்றிக்கொண்டு முதலியார் வளவு ஒழுங்கைக்கால் போனார். பின்னால் வவியன்மாமாவும் , அப்பாவும் சயிக்கிளில் போனார்கள்.

தெல்லிப்பழை ஆசுப்பத்திரி வாசலையடைந்தவர்களைப் பார்த்த காவலாளி சொன்னானாம். நல்லகாலம் தப்பீட்டியள்... இப்பத்தான் 24ட்றக்கிலை ஆமி போறாங்கள். கண்டிருந்தாச் சுட்டுத்தள்ளியிருப்பாங்கள். தங்களைக்காத்த கடவுளுக்கு அம்மாவும் புண்ணியன் சித்தப்பாவும் நன்றி சொல்லிக்கொண்டு ஆசுப்பத்திரிக்குள் போனார்கள்.

கிறேசரடிக்குப் பக்கத்தில் வரும்போதே ஆமியின் வாகனத்தைக் கண்டுவிட்டவர்கள். சயிக்கிள்களை வீதிக்கு அருகில் போட்டுவிட்டு கிறேசர் வளவு மதிலுக்குப் பின்னால் ஒழித்திருந்தார்கள். வவியன்மாமாவுக்கும் , அப்பாவுக்கும் இனித்தாம் தப்புவோம் என்ற நம்பிக்கை இழந்து போயிற்று. சத்தமின்றி இருந்தவர்களுக்கு உயிர்வந்தது போல் 24வது ட்றக் போனதன் பின் அந்தத் தெல்லிப்பழை வீதி அமைதியாகியது. அவசரஅவசரமாக சயிக்கிளில் ஏறிய இருவரும் சைக்கிள் மிதியிலிருந்து காலையெடுத்தது ஆசுப்பத்திரி வாசலில்தான்.

அம்மாவுக்கு கொண்டு போன சாமான்களைக் கொடுத்துவிட்டு திரும்பி வந்து அப்பாவும் வவியன்மாமாவும் சொன்ன அந்தச் சம்பவம் கேட்டபோது மனசில் பரவிய நாங்கள் உயிருடன் வாழ்வோமா என்பதே கேள்வியாக்கியது ? அவர்களை ஆமிகண்டிருந்தால் அவர்களின் நிலை என்னவாயிருக்கும்.....! லங்கா பூவத்தின் ஒலிபரப்பில் செய்திதான் வந்திருக்கும் பயங்கரவாதிகள் இருவர் தெல்லிப்பழை வீதியில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள்.

அந்தநாட்களில் கட்டுவனிலிருந்து தெல்லிப்பழை ஆசுப்பத்திரி வரையும் போய்வருவதென்றால் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டுதான் பயணங்கள் நடந்தன. ஆறாத்தை வயிரவர் கோவிலடி றோட்டால் ஆமி திடீரென்று புகுந்து கட்டுவனுக்கு வந்தால் காணும் மனிதர்கள் பிணம்தான். யாழ்நகரின் எந்தவீதியும் பயத்தில்தான் இருந்தது என்றாலும் எமக்கு ஆறாத்தை வயிரவர் ஒழுங்கையால் ஊருக்குள் பூரும் ஆமிக்குத்தான் பயம்.

ஒருமாதமாய் எங்கள் தம்பி இன்று பிறப்பான் நாளைபிறப்பான் என நாங்கள் நாட்களை எண்ணிக்கொண்டிருந்த அந்தப்பொழுதுகளின் ஒரு விடியல் ஆவணி இருபது எங்கள் காதுகளில் இனித்தது. தம்பி பிறந்துவிட்டான். வீடுவீடாகச் சென்று எங்கள் வீட்டு முருகனின் வரவை நானும் தங்கைச்சிமாரும் சொல்லிக்கொண்டிருந்தோம். தம்பி பிறந்த சந்தோசத்தை அப்பா சாராயம் குடித்துக் கொண்டாடினார்.

மீள்பதிவு - 22.07.09