Sunday, July 18, 2010

இவர்களின் எஞ்சிய நாட்களை இனியதாக்குவோமா?

யுத்தத்தினால் காயமுற்று நரம்புகள் பாதிக்கப்பட்டு கழுத்துக்குக் கீழும் இடுப்புக்கு கீழும் உணர்வற்றுப் போயுள்ள அறுபது பேருக்கான உதவியை நேசக்கரம் நாடிநிற்கிறது. படுக்கையிலும் சுழல்கதிரைகளிலும் வாழும் இவர்கள் வாழப்போகும் மீதி நாட்களிலாவது மகிழ்ச்சியாக வாழ இவர்களுக்கு நேசக்கரம் கொடுங்கள் உறவுகளே...? ஒரு நோயாளிக்கு மாதாந்தம் இரண்டாயிரம் ரூபா பெறுமதியான அன்றாட சீனி, தேயிலை,சவர்க்காரம் போன்ற சில தேவைகளை நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் எங்கள் உறவுகளுக்கு உதவுங்கள். இவர்களில் பெரும்பாலானோர் படுக்கைப்புண்களாலும் காயங்களாலும் அவதியுறுகின்றனர். இந்த நடமாட முடியாத சிலரது படங்களை இங்கே இணைக்கிறோம்.





Sunday, July 11, 2010

பெற்றவருமில்லை ஒற்றைக் கையுமில்லை நேசக்கரம் கொடுப்பீரா உறவுகளே...?

இன்றைய குரலுக்குரியவனுக்கு அம்மாவும் அப்பாவும் யுத்தத்தில் இறந்துபோனார்கள். 10 வயதிலிருந்து இவன் வாழ்ந்தது தனிமைதான். கடந்தவருடம்வள்ளிபுனம் என்ற பகுதியில் விழுந்த எறிகணையொன்று இவனது வலதுகையையும் இருந்த இடம் தெரியாமல் சிதைத்துப்போனது.இன்று இந்த 25வயதுஇளைஞன் தனது வலது கையை தோள்பட்டையுடன் இழந்துபோன நிலையில்வாழ்கிறான்..

அன்றாட தனது தேவைகளைப் பூர்த்தி செய்யவோ அல்லது தனக்கானஎதிர்காலத்தை அமைத்துக் கொள்ளவோ எதுவித வசதிகளுமற்று வாழும்இவனது கதைகள் சோகம் நிறைந்தது. ஆயினும் வாழ வேண்டுமென்றகனவோடு தனக்காய் ஒரு தொழிலைத் தேடுகிறான். ஒற்றையுடன் இருக்கும்இவனை எந்த நிறுவனங்களும் ஏற்றுக்கொள்ளாத நிலமையிலும் தினம் தினம்வேலைதேடி அலைகிறான் இவன். அண்மையில் இவன் ஒரு கடையில் வேலைதேடிச்சென்ற நேரம் அவனது ஒற்றைக்கையை காரணம் காட்டி அவனுக்குவேலை மறுக்கப்பட்ட போது மனமுடைந்து ஓரிடத்தில் நின்றவனை நேசக்கரம்பயனாளர் ஒருவர் நம்பிக்கையளித்து நேசக்கரத்திடம் கொண்டு வந்துசேர்த்திருக்கிறார்.

Monday, June 21, 2010

எதுவுமற்ற 30 பல்கலைக்கழ மாணவர்களுக்கு உதவுங்கள்

எல்லாவற்றையும் இழந்து தங்கள் உயிர்களையும் மிஞ்சிய கல்வியையும் நம்பி புனர்வாழ்வு முகாம்களிலிருந்து வெளிவந்து கற்கைக்குச் சென்றுள்ள 30 மாணவர்களுக்கான உதவிகளை நேசக்கரம் உலகத்தமிழர்களிடம் கோருகிறது. இந்த மாணவர்கள் உடலாலும் மனதாலும் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இவர்களது குறிப்பிட்ட காலக்கற்கைக்கான உதவிகளை வழங்குமிடத்து அவர்களது எதிர்காலத்தை ஒளிபெறச் செய்யலாம்.

ஒரு மாணவருக்கு இலங்கைரூபாய் ஐயாயிரம் மாதாந்தம் தேவைப்படுகிறது.

உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள். மாணவர்களுடைய விபரங்களைத் தந்துதவுவோம். நீங்கள் நேரடியாகவே மாணவர்களுடன் தொடர்புகளைப் பேணி உதவிகளை வழங்கலாம்.

உதவிகோரும் 30 மாணவர்களின் விபரங்கள்

1) நிசாந்தினி கனகரத்தினம்
கலைப்பிரிவு

2)கந்தையா பரமேஸ்வரன்
முகாமைத்துவம் 1ம் வருடம்

3) தனபாலசிங்கம் பிரதீப்
பெளதீக விஞ்ஞானம்

4)ஆறுமுகம் அமலன்
மீன்பிடியியல் விஞ்ஞானம்

5) கணேசலிங்கம் வினோ
சமூகவியல் 1ம் வருடம்

6) சீவரத்தினம் தாரகன்
கலைப்பீடம் 1ம் வருடம்

7) நடராசா கிரிநாத்
மருத்துவம் 1ம் வருடம்

8) செல்வராசா கயோதீபன்
கலைப்பிரிவு 1ம் வருடம்

9) அன்ரன் பெனடிக்ற் யூட்குமார்
முகாமைத்துவம் 2ம் வருடம்

10) கந்தசாமி சாரங்கன்
விவசாயம் 1ம் வருடம்

11)கனகலிங்கம் விக்னா
கலைப்பிரிவு 1ம் வருடம்
12) கந்தையா சிறீகாந்
கலைப்பிரிவு 1ம் வருடம்

13) செல்லன் கீரன் (ஜனாதிபதியிடம் பரிசு பெற்றவர் 4 கிடைத்தது)
முகாமைத்துவம் 2ம் வருடம்

14) நவரத்தினம் தருசன்
கலைப்பீடம் 2ம் வருடம்

15) கந்தையா பரமேஸ்வரன்
முகாமைத்துவம் 1ம் வருடம்

16) சுகுமாரன் கயிலாயபிள்ளை
2ம் வருடம் முகாமைத்துவம்.

17) பாலசிங்கம் பாலகுமாரன்
கற்கும் வருடம்முதலாம் வருடம் (இன்னும் 3வருடங்கள் கற்க வேண்டும்)
முகாமைத்துவம்.

18)பெயர் - மாயன் சுகந்தன்
கற்கும் வருடம்இரண்டாம் வருடம்
விளையாட்டு விஞ்ஞானம்.

19)பெயர் - கனகரத்தினம் மயூரன்
கற்கும் வருடம் – 2ம் வருடம்.
விளையாட்டு விஞ்ஞானம்.

20)பெயர் - குமாரசாமி குகன்
கற்கும் வருடம்முதலாம் வருடம் (இன்னும் 3வருடம் கற்க வேண்டும்)
வணிகத்துறை.

21) சுலக்ஸன் தயாபரன்
முதலாம் வருடம் , உயிரியல் விஞ்ஞானம்

22) நிசாந்தன் கமலநாதன்
கலைப்பிரிவு 1ம் வருடம்

23) கமலேஸ்வரன் பஞ்சநாதன்
கலைப்பிரிவு 1ம் வருடம்

24) நவரத்தினம் நவநந்தன்
முகாமைத்துவம் முதலாம் வருடம்

25) றாயேஸ் துரைச்சாமி
2ம் வருடம் கலைப்பிரிவு

26) சுரேந்திரன் சுந்தரலிங்கம்
1ம் வருடம் விஞ்ஞானம்

27) உதயகுமார் பழனியாண்டி
1ம் வருடம் முகாமைத்துவம்

28) ரமேஷ்குமார் காளிமுத்து
கலைப்பீடம் 2ம் வருடம்

29) சிவராசா வேலுச்சாமி
கலைப்பீடம் 1ம் வருடம்

30) மகேந்திரம் சுப்பிரமணியம்
கலைப்பிரிவு 2ம் வருடம்

Sunday, June 13, 2010

ஒரு மாவீரனின் மனைவி பேசுகிறாள்

இன்றைய குரலுக்குரியவள் ஒரு மாவீரனின் மனைவி. ஒரு தளபதியாய் எத்தனையோ வெற்றிகளுக்கெல்லாம் வேராக இருந்த ஒரு மாவீரனினுடன் வாழ்ந்த வாழ்வின் இனிமைகளையும் அவனை இழந்த துயரின் வலிகளையும் பகிர்கிறாள். இந்தப் பெண்ணின் துயரங்கள் ஆயிரமாயிரம் தமிழ்ப்பெண்களின் கண்ணீரின் கதைகளாக வருகிறது. வெற்றிகளை மட்டுமே கேட்ட காதுகளிற்கு இத்தகைய கண்ணீரின் கனம் புரியாமலேயே இருந்திருப்பதை உணர்கின்ற தருணங்களில் இந்த இழப்புகள் பிரிவுகளுக்காக நாமென்ன செய்தோமென்ற கேள்வியே மிஞ்சிக்கிடக்கிறது.

வாழ்வும் மரணமும் இயற்கையின் தீர்வாகிற போதே மனிதம் எத்தனை தவித்துப்போகிறது. ஆனால் எங்கள் மண்ணிலும் எங்கள் மனிதர்களிலும் வாழ்வு துயராலேயே தின்னப்பட்டிருக்கிறது. இதோ ஒரு மாவீரனின் மனைவி பேசுகிறாள். இவளது கண்ணீரின் ஊடாக கனக்கின்ற துயரங்களின் பாரம் உங்களின் சிந்தனைக்காக….


Monday, May 31, 2010

அது பிணங்கள் மீதான நடைபயணமென்றே சொல்கிறேன்...உயிர் பிழைத்த ஒருவனின் வாக்குமூலம்

இனிமையும் சந்தோசங்களும் நிறைந்திருந்த குடும்பத்தின் சந்தோசங்களைக் காலம் பிய்த்தெறிந்தது போட இந்த 28வயது இளைஞனின் வாழ்வும் சந்தோசங்களும் கருக்கப்பட்டு கனவுகளும் சிதைந்து போனது. கல்வியில் சிறந்த பிள்ளைகளின் எதிர்காலம் மீது நம்பிக்கை வைத்திருந்த பெற்றோரின் நம்பிக்கையில் விழுந்த பேரிடியாய்ப்போனது. அக்காவைக்காக்க தம்பியும் தம்பியை தங்கையை காக்க அண்ணன்களுமென வீட்டுக்கொருவரை களங்கள் உள்ளிழுத்துக் கொண்டது. யாழ் பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருந்த இந்த இளைஞனும் தனது தங்கையையும் முட்டு நோயாளனான தனது தம்பியையும் காப்பாற்றப் போராளியானான். காலத்தின் கட்டளையை ஏற்றுத் தானாகவே களங்ளில் காவலிருந்தான். மரணம் காலடிவரை வந்து வந்து செல்ல சாவின் பயமும் இனி வாழ்வில்லையென்ற நினைப்பும் எல்லா நம்பிக்கைகளையும் தகர்த்தெறிந்தது. உயிர் வாழ்தலில் இருந்த விருப்பால் சாத்திரத்தை நம்பி சாத்திரம் கேட்டவனுக்கு மரணம் முடிவென சாத்திரமும் சொல்லியானபின் வாழ்வும் மரணமும் அவனோடு சண்டையிட்ட நாட்களவை. 2009 மேமாத முடிவுகளின் பின்னர் இவன் சாவிலிருந்து தப்பி சரணடைந்தான்….தனது நிலமைகளை எங்களோடு பகிரும் இந்த 28வயது இளைஞனின் குரலைக் கேளுங்கள்.

Saturday, May 29, 2010

குடும்பத்தில் யாவரையும் இழந்து தனியனான ஒரு மாணவனின் குரல்

இந்தக் குரலுக்குரிய 31வயது நிரம்பிய மாணவன் தனது கற்கைக்காலம் தாண்டிய நிலையில் பல்கலைக்கழகம் வந்திருக்கிறான். கடந்த வருடம் 10ம் மாதம் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு யாழ் பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ள இவனுக்கு உறவுகள் என்று சொல்ல எவருமேயில்லை. 2006இல் தந்தையார் நோய்வாய்ப்பட்டு இறந்து போக 2009 தாயாரையும் இரு சகோதரர்களையும் இழந்து போனான். இறுதியில் உறவினர்கள் சிலருடன் சேர்ந்து முகாமுக்குப் போனான். முகாமிலிருந்து விடுபட்டு கற்றலுக்கென்று வந்த பின்னர்தான் வறுமையும் யாருமற்றுத் தவிக்கின்ற வெறுமையும் இவனை ஆட்கொண்டுள்ளது. யாருமேயில்லை இனிப் படித்தென்ன விட்டென்ன என்கிற நிலைமையில் இருந்தவனை நமது நேசக்கரம் யாழ்மாவட்டத் தொடர்பாளர் தீபச்செல்வனால் நேசக்கரத்திடம் கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளான். இனி வாழ்வதில் என்ன இருக்கிறது என்கிற மனைநிலையில் இருந்தவனுடன் உரையாடிய போது அவனுக்கான ஆறுதலை ஆற்றுப்படுத்தலை செய்ய வேண்டிய நிலையில் இவனது மனநிலை இருப்பதை உணர முடிகிறது. இவனுடனான உரையாடலை ஒரு செவ்வியாக இல்லாமல் தோழமையுடன் அணுகிய போது அவன் சொன்னவற்றிலிருந்து சில துளிகளை உங்களுடன் பகிர்கிறோம்.