Sunday, July 18, 2010

இவர்களின் எஞ்சிய நாட்களை இனியதாக்குவோமா?

யுத்தத்தினால் காயமுற்று நரம்புகள் பாதிக்கப்பட்டு கழுத்துக்குக் கீழும் இடுப்புக்கு கீழும் உணர்வற்றுப் போயுள்ள அறுபது பேருக்கான உதவியை நேசக்கரம் நாடிநிற்கிறது. படுக்கையிலும் சுழல்கதிரைகளிலும் வாழும் இவர்கள் வாழப்போகும் மீதி நாட்களிலாவது மகிழ்ச்சியாக வாழ இவர்களுக்கு நேசக்கரம் கொடுங்கள் உறவுகளே...? ஒரு நோயாளிக்கு மாதாந்தம் இரண்டாயிரம் ரூபா பெறுமதியான அன்றாட சீனி, தேயிலை,சவர்க்காரம் போன்ற சில தேவைகளை நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் எங்கள் உறவுகளுக்கு உதவுங்கள். இவர்களில் பெரும்பாலானோர் படுக்கைப்புண்களாலும் காயங்களாலும் அவதியுறுகின்றனர். இந்த நடமாட முடியாத சிலரது படங்களை இங்கே இணைக்கிறோம்.





No comments: