ரணங்களும் வலிகளும் நிரம்பிய மனங்களின் துயர்களிவை. காணாமற்போன அப்பாக்களின் அம்மாக்களின் பிள்ளைகளும் காணாமற்போன கணவர்களின் மனைவிகளின் துயர்களுமாய் தமிழர் மனங்களில் மிஞ்சிக் கிடப்பது துயர்மட்டுமே. சாபங்களால் சபிக்கப்பட்டு துயரங்களால் இறுக்கப்பட்டு அகதி வாழ்வில் முடக்கப்பட்டு அனைத்தும் இழந்து போன மனங்களின் குரல்களிவை.
Tuesday, April 20, 2010
Monday, April 19, 2010
ஒரு போராளி மனைவியின் குரல் இது
நேசக்கரம் இது துயரப்படும் எமது மக்களுக்கான ஆதரவுக்கரமாக ஆரம்பித்துள்ளோம். பல நண்பர்களின் முயற்சியில் 3வருடங்களுக்கு மேலாக எம்மால் இயன்றதை செய்து வந்தநாம் 2010 முதல் யேர்மனியில் பதிவு செய்து ஒரு நிறுவனமாக எழுந்துள்ளோம். வலைப்பூ நண்பர்களையும் எமது நேசக்கரத்தோடு கைகோர்க்கும்படி அழைக்கிறோம்.
இது நேசக்கரம் அமைப்பின் உத்தியோகபூர்வ இணையம். வாருங்கள் வந்து பாருங்கள். உங்கள் கரங்களையும் இணையுங்கள்.
http://nesakkaram.org/
இக்குரல் போல ஆயிரமாயிரம் குரல்களின் துயர்களை நேசக்கரம் ஊடாய் எடுத்து வருகிறோம்.
Tuesday, March 2, 2010
கொள்ளைபோன கனவும் ஓராண்டு நினைவுகளும்
ஓராண்டை இழுத்து வந்துவிட்டது காலம்
உன் நினைவுகள் தா(தே)ங்கிய மனங்களில்
நீ எத்தனையோ அடையாளங்களாய்.....
தேசம் தேசியம் என்றெல்லாம்
கனவுகள் நிரம்பியல்லவா உனது
கடிதங்களை எழுதினாய்...!
ஒவ்வொரு தோழமைப் பிரிதலின் முடிவிலும்
உரமூட்டி உரமூட்டியல்லவா
உன்னைத் தீட்டிக்கொண்டாய்....!
உனதும் உன்போன்ற தூயவர்கள் கனவுகளிலும்
காலம் இப்படியொரு கோலம் வரையுமென்று
கனவில்கூட எண்ணாத ஒரு பொழுதொன்றில்
எங்கள் கோட்டைகள் சிதைவுறத் தொடங்கியது....
எங்கள் கொள்கைகள் நலிவுற்றுச் சாகத் தொடங்கிய
நாளில் நீ ஞானிபோய் சொன்னாயாம்....
மேமாத முடிவுகளைத்
தைமாதமே உரைத்த நீ
மாசி27 கிபீரடியில்
உன் கொள்கையும் இலட்சியமும்
தமிழீழ தேசத்தின்
கனவுடனே கரைந்து போனது....
நீ கண்ட கனவும்
உன்போல் ஆயிரமாயிரம் பேரின் கனவுகளும்
கொள்ளைபோய்விட்டன.....
தடுப்பு முகாம்களிலும் அகதி முகாம்களிலும்
அள்ளுண்டு அரியுண்டு
அனைத்துமே பூச்சியத்தில் போய் நிற்கிறது.
வாழ்வோடு உன்னில் பாதியானவள் - உன்
உயிரின் துளியான உன் குழந்தை
உனது வயதான பெற்றோர்கள்
உன்னை நேசித்த நாங்கள் எல்லோரும்
நீயிருந்தால் நீயிருந்தாலென்று
எத்தனையோ விதமான கற்பனைகள்
எங்களுக்குள்.....
உன்னை வார்த்தாற்போல
உன் செல்வமகன்
அவன் மழலைக்குரலில்
உன் குணங்கள் யாவும்
தேங்கிக் கிடப்பது போல....
உன்னை எழுதுகிறான்
உன்னைத் தேடுகிறான்....
உன் நினவுகளை எங்களோடு தேக்கி
அவன் மழலைக்குரலில் நீயே வாழ்கிறாய்....
தொலையலையில் அழைக்கும் போதெல்லாம்
என்னை அத்தையென்கிறான் உன் பிள்ளை
அக்கா அண்ணா பற்றியெல்லாம் அக்கறைப்படுகிறான்.....
அவன் குரல் கேட்டால்
உன்னையே காண்பது போன்ற பிரமை....
நீ வந்தால்....
இந்த மகிழ்வுகள் எத்தனை நிறைவாயிருக்கும்...?
(லெப் கேணல் அருணன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு 27.02.2010)
Monday, January 11, 2010
வரலாறு எழுதிய கதைகளில் வாழாது போயினர்.
மெல்ல மெல்லக் கசியும்
உண்மைகளிலிருந்து
நீண்ட பெருவெளிக் கனவு
தற்கொலை செய்து கொள்கிறது.....
முட்புதர்களின் அடர்த்திக்குள்ளிருந்து
சொட்டுச் சொட்டாய்
சேர்த்து வைத்தவையெல்லாம்
இரத்தம் குளி(டி)த்துப்
பெருத்து நாறிப் பிணங்களாய்
மனித எலும்புக் கூடுகளாய்
வெளிவருகிறது.
நேசித்தவர்களும் நேசிப்பின் நினைவாய்
விட்டுச் சென்ற வார்த்தைகளும்
ஆள்மாறி ஆள்மாறி
அவர்கள் பகிர்ந்தவற்றைப் பகிர்ந்து கொண்டு
துயர் வலியில் தடயமறிவிக்காமல்
தொடர்பிலிருந்து விடுபடுகிறார்கள்.
சீருடைகளோடு நிமிர்ந்து நின்ற வீரங்கள்
சாவின் நிணம்மாறாத்
தடைமுகாம் வேலிகள் பின் தலைகுனிந்து....
யாது நிகழ்ந்திற்று ஏது நடந்திற்றென்று
ஏதுமறியா நிலையில் இலக்கத் தகடுகளால்
அவர்கள் உண்மை அடையாளம்
அழிக்கப்படுகிறார்கள்.
களம் விட்டால் அன்றி நிலமறியாப் பிள்ளைகளின்
நிலமை கவலை தருவதற்கும் மேலாய்
இக்காலத்தைச் சப்பித்துப்பிச் சபிக்கிறது.
இன்னொருவன் போராட
இன்னொருத்தி இறந்து போக
மிடுக்கோடு கவியெழுதிய கையில் - அவர்கள்
விட்டுச் சென்ற துயரம் வழிகிறது.
தோழியே என்றவன்(ள்) தொடர்பறுத்துத்
தொலைந்ததும்....
தங்கையே என்றவன் தன் கடைசிச் சிரிப்பை மட்டும்
தந்துவிட்டுச் சென்றதும்....
அக்கா என்றவன் அசுமாத்தமின்றிப் போனதும்....
மகளே என்றவர் மவுனமாய் ஆனதும்....
மருமகளே என்றவர் மண்ணணையில் வீழ்ந்ததும்.....
எல்லாம் போயிற்று
எல்லார் உயிரும் என்னைப் போல
இன்னும் வாழ்வதில் எத்தனை பிரியமுடன்
வாழாது போயினர்.....?
வரலாறு எழுதிய கதைகளில் அவர்கள்
பெயரிட்ட பிள்ளைகளும்
துணைவந்த துணைவிகளும்
தனித்துப் போயினர்......
ஒரு நேர உணவிற்கும்
ஒற்றைப் படுக்கை நிழலுக்கும்
எவரையெல்லாமோ இறைஞ்சி....
எஞ்சிக் கிடப்பது கண்ணீர் மட்டுமேயான
இயலாத் துயரோடு
இன்னும் நம்புகிறார்கள்....
என்னை உன்னை எம் எல்லோரையும்......
01.01.2010
உண்மைகளிலிருந்து
நீண்ட பெருவெளிக் கனவு
தற்கொலை செய்து கொள்கிறது.....
முட்புதர்களின் அடர்த்திக்குள்ளிருந்து
சொட்டுச் சொட்டாய்
சேர்த்து வைத்தவையெல்லாம்
இரத்தம் குளி(டி)த்துப்
பெருத்து நாறிப் பிணங்களாய்
மனித எலும்புக் கூடுகளாய்
வெளிவருகிறது.
நேசித்தவர்களும் நேசிப்பின் நினைவாய்
விட்டுச் சென்ற வார்த்தைகளும்
ஆள்மாறி ஆள்மாறி
அவர்கள் பகிர்ந்தவற்றைப் பகிர்ந்து கொண்டு
துயர் வலியில் தடயமறிவிக்காமல்
தொடர்பிலிருந்து விடுபடுகிறார்கள்.
சீருடைகளோடு நிமிர்ந்து நின்ற வீரங்கள்
சாவின் நிணம்மாறாத்
தடைமுகாம் வேலிகள் பின் தலைகுனிந்து....
யாது நிகழ்ந்திற்று ஏது நடந்திற்றென்று
ஏதுமறியா நிலையில் இலக்கத் தகடுகளால்
அவர்கள் உண்மை அடையாளம்
அழிக்கப்படுகிறார்கள்.
களம் விட்டால் அன்றி நிலமறியாப் பிள்ளைகளின்
நிலமை கவலை தருவதற்கும் மேலாய்
இக்காலத்தைச் சப்பித்துப்பிச் சபிக்கிறது.
இன்னொருவன் போராட
இன்னொருத்தி இறந்து போக
மிடுக்கோடு கவியெழுதிய கையில் - அவர்கள்
விட்டுச் சென்ற துயரம் வழிகிறது.
தோழியே என்றவன்(ள்) தொடர்பறுத்துத்
தொலைந்ததும்....
தங்கையே என்றவன் தன் கடைசிச் சிரிப்பை மட்டும்
தந்துவிட்டுச் சென்றதும்....
அக்கா என்றவன் அசுமாத்தமின்றிப் போனதும்....
மகளே என்றவர் மவுனமாய் ஆனதும்....
மருமகளே என்றவர் மண்ணணையில் வீழ்ந்ததும்.....
எல்லாம் போயிற்று
எல்லார் உயிரும் என்னைப் போல
இன்னும் வாழ்வதில் எத்தனை பிரியமுடன்
வாழாது போயினர்.....?
வரலாறு எழுதிய கதைகளில் அவர்கள்
பெயரிட்ட பிள்ளைகளும்
துணைவந்த துணைவிகளும்
தனித்துப் போயினர்......
ஒரு நேர உணவிற்கும்
ஒற்றைப் படுக்கை நிழலுக்கும்
எவரையெல்லாமோ இறைஞ்சி....
எஞ்சிக் கிடப்பது கண்ணீர் மட்டுமேயான
இயலாத் துயரோடு
இன்னும் நம்புகிறார்கள்....
என்னை உன்னை எம் எல்லோரையும்......
01.01.2010
Friday, November 27, 2009
Sunday, November 15, 2009
தனித்துப் போயினர் அவர்கள்
யாரது ?
இலக்கத் தகடுகள் அடையாளம் சுட்ட
குற்றவாழிகளாய்
தனித்தனி அடையாளங்களுடன்.....
தெரிந்த முகங்களைத் தேடிக்கொண்டு போனதில்
அவள் திடீரென ஞாபகத்துக்குள் வந்தாள்
பின்னே ஓடியவரிசை முன்னிழுந்துப்
பார்த்து உறுதியாகிறது அவள் தான் அது....
மணியாய் ஒலித்த குரல்
மறக்காத குரலுக்குரிய மொழி
மண்தரையில் ஒலிவாங்கியோ ஏதோ
இருமருங்கும் தடுத்திருக்க
ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறாள் .
செஞ்சோலைக் குழந்தைகளின் சித்தியாய்
சிறந்த பாடகியாய் தோழமையின் ஆழமாய்
அறிமுகமானவள்......
மூச்சு முட்ட சுதந்திர தேசக்கனவோடு
களங்களில் நின்று காவியச் செதுக்கலில்
தன் கடமைகள் செய்தவள்.....
இன்று...,
எல்லாம் எல்லாருமாய்
ஆட்தேடும் வரிசையில்
அவளும் அடையாளம் தெரிகிறாள்....
மீட்கவோ அவள் துயர் கேட்கவோ
எந்தக் குரல்களுமின்றி
தனித்துப் போயினர் அவர்கள்.....
தடையரண்கள் தகர்த்த கைகள்
முட்கம்பி முடிச்சுகளுக்குள்
முகம் தொலைந்து
வெறுமையின் கோரங்களால்
சூழப்பட்ட நிழல்களாய்.
இழந்து போனோம் எல்லோரையும்.....
நிமிர்ந்த நடை நேர் கொண்ட பார்வையெனப்
பாரதியின் எழுத்துக்களுக்கு
உயிர் கொடுத்த ஞானக்கண்கள்
குழிவிழுந்து ஒட்டியுலர்ந்து ஒடுங்கிக் கிடக்க
இன்னும் கனவுகளில் நாங்கள்......
(10.11.09 அன்று பார்த்த UNHCR ஒளிப்படத்தில் பாடகி மணிமொழியைப் பார்த்த போது எழுந்த வரிகள்....)
Monday, November 2, 2009
மீள்குடியேற்றம் மீண்டும் அகதியாய் !
_-_Refugee_(500_x_375).jpg)
கோடைகாலச் சூரியனால் உறிஞ்சப்பட்ட
ஆழக்கடலின் கரைகளின் பாழங்களாய்
வாழ்ந்திருந்த வீடும் வழியறிவித்த தெருக்களும்
வடிவு தந்த பச்சைய மரங்களும்
எட்டும் தூரம் வரையும்
எதுவுமில்லாத் தரைமட்டமாய்….
சுடுகாட்டு வாசம் நாசியில் முட்டித்
தொண்டைக்குள் உறைகிறது….
ஊர் திரும்பிய மகிழ்வு உதிர்ந்து கருக
மீளவும் தடையரணில்
கால்கள் தடையிடப்படுகிறது…..
போரின் கோரம் மேமாதத்து நிகழ்வின் மீதமாய்
பெருநிலம் முழுவதும் யாருமற்றுப் போன பின்னும்
நிழல் இறக்கித் தலைவிரித்துத் தாண்டவ நெருப்போடு
காத்திருக்கும் கனம் இன்னும் மீதமாய்
குடியேற்றம் ஆயுதங்கள் நடுவே அமுலாகிறது……
*மீள்குடியேற்றம்*
மீண்டும் நிவாரணம் வரிசை
நிம்மதியற்ற நிகழ்வுகள் யாவும் வளமையாய்…..
பகலில் குடியிருந்த நிலத்தில் பணியும்
இரவில் பள்ளிக்கூடத்துள் பாய் விரித்தலும்
*அகதி* என்ற சொல்லுக்கு அர்த்தம் தரும் வகையில்
மீள்குடியேற்றம் மீண்டும் அகதியாய் !
இன்ரனெட் இணையம்
உலகவிரிவு உள்ளங்கைக்குள் திரள
நொடியில் விடயங்கள் உலகைச் செல்லும் காலத்தில்
இன்னும் எங்களின் நிலத்தில் தடைவிதிக்கப்பட்டு
ஓமந்தையோடு ஒளிப்படக்கருவி ஒலிக்கும் செல்லுலா
எல்லாம் கைமாற்றிக் கொடுத்துவிட்டுக் கடக்கிறது வாகனம்
எத்தனைதான் உலகு மாறினாலும் இந்தத் தமிழின விதி
தரித்திரவிதியோ….?
உள்ளெரியும் இதயத்துத் துயர்
வாகன இரைச்சலுக்குள் புதைகிறது.
29.10.09 (மல்லாவிப் பகுதியில் இலங்கையரசினால் கொண்டு போய் விடப்பட்டுள்ள மக்களுக்குப் பொருட்கள் விநியோகத்திற்குச் சென்று வந்து ஒரு UNHCR பணியாளரின் கருத்திலிருந்து இப்பதிவு எழுதப்பட்டுள்ளது)
Subscribe to:
Posts (Atom)
