Monday, March 19, 2012

எங்கள் விடுதலையின் பொருளறியும்


கண்முன் விரிந்து
கனவுவெளியெங்கும்
விதைந்து கிடக்கிற
எங்கள் மீதான வன்மங்கள்
ஒருநாள்
ஓர்மமாய் எழும்.
அன்று எங்கள் தீ விரல்கள்
இப்பூமியெங்கும் தணலேற்றும்…..
தமிழச்சிகளின் மார்பையறுத்தவனும்
பிறப்புறுப்பை மிதித்தவனும்
மரணத்தின் வலியறியும் விதியெழுதும்
நாளின் பொழுதறியும் - எங்கள்
விடுதலையின் பொருளறியும்....
12.03.2012

 (நிர்வாணமாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்போராளிகளின் ஒளிப்படங்கள் பார்த்த வலியின் வெளிப்பாடாய் இக்கவிதை)

2 comments:

தீபிகா(Theepika) said...

"மரணத்தின் வலியறியும் விதியெழுதும்
நாளின் பொழுதறியும்."

ஆறுதலும் நம்பிக்கையும்
தருகிற வார்த்தைகள்.

நம்பிக்கைகளை சுமந்துகொண்டு
இடிந்துவிடாமல் இருப்போம்.

சாந்தி நேசக்கரம் said...

நம்பிக்கையென்ற ஒற்றைச் சொல்மட்டுமே எம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது தீபிகா. வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.