Thursday, September 24, 2009

இந்தப்பிள்ளைகளுக்கு யாராவது உதவுவீங்களா...?

யாழ்பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் இரண்டு மாணவர்களுக்கு அவர்களது கல்வியைத் தொடர்வதற்காக ஒருவருடம் அல்லது 6மாதங்களுக்கு யாராவது உதவ முடியுமா ?
ஏற்கனவே இப்பிள்ளைகளின் பெற்றோர் வன்னிப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து மிகவும் சிரமத்துக்கு உள்ளான நிலையில் இருக்கிறார்கள். பெற்றோரால் எந்த நிலமையிலும் பிள்ளைகளின் படிப்பைத் தொடர பொருளாதார உதவியை கொடுக்க முடியாதுள்ளது.

குடும்பத்தில் 4பிள்ளைகளும் பல்கலைக்கழகம் தெரிவானதில் மகிழ்ந்த அந்தப்பெற்றோர் கடைசித்தேர்வில் தங்கள் மகளை இழந்துவிட்டார்கள். எஞ்சிய 3பிள்ளைகளுக்காக அந்த அம்மா உதவி கேட்காத இடமேயில்லை. இதோ அதோ என்ற உதவி நிறுவனங்களும் அவர்களது துயரக்கதையை படக்கதை கேட்டது போல கேட்டுவிட்டு மறந்துவிட்டார்கள். இன்னும் சிலரோ அவர்கள் உண்மையில் வசதியில்லாத மாணவர்களா என்ற ஆராட்சியில் இறங்கி நிற்கிறார்கள். கிட்டத்தட்ட 3மாதங்கள் இத்தகையோரின் சொல்லை நம்பி ஏமாந்தாயிற்று. ஒரு பிள்ளைக்கான உதவியை மனவுவந்து யேர்மனியில் பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்கும் மாணவி பொறுப்பெடுத்துள்ளாள்.

ஏனைய இருவரில் ஒருவருக்கு இன்னும் 8மாதங்களில் படிப்பு முடியவுள்ளது. யாராவது உதவுவீர்களானால் அவர்களுடனான தொடர்பினை ஏற்படுத்தித் தரலாம். உதவ முடியுமா ? என்பதை தனிமடல் அல்லது எனது மின்னஞ்சலுக்கு தெரியப்படுத்துங்கள். மாதாந்தம் ஒரு பிள்ளைக்கு இலங்கை ரூபா ஐந்தாயிரம் (5000) உதவி தேவைப்படுகிறது. நீங்கள் ஒருவரால் முடியாது எனில் இருவர் அல்லது மூவர் சேர்ந்தும் செய்யலாம்.

நல்மனம் படைத்தோர் யாராவது உதவுவீர்கள் என்ற நம்பிக்கையில் இங்கே எழுதுகிறேன்.

எனது மின்னஞ்சல் - rameshsanthi@gmail.com

2 comments:

பதி said...

உங்களுடைய இந்த முயற்சி சம்பந்தமாக தாங்களுக்கு விரிவான மின்னஞ்சல் ஒன்றினை அனுப்பியுள்ளேன்.

நன்றி.

தமிழீழநாதன் said...

Our Leader is alive you know....

remove your ninaivanzhali phase