Monday, June 21, 2010

எதுவுமற்ற 30 பல்கலைக்கழ மாணவர்களுக்கு உதவுங்கள்

எல்லாவற்றையும் இழந்து தங்கள் உயிர்களையும் மிஞ்சிய கல்வியையும் நம்பி புனர்வாழ்வு முகாம்களிலிருந்து வெளிவந்து கற்கைக்குச் சென்றுள்ள 30 மாணவர்களுக்கான உதவிகளை நேசக்கரம் உலகத்தமிழர்களிடம் கோருகிறது. இந்த மாணவர்கள் உடலாலும் மனதாலும் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இவர்களது குறிப்பிட்ட காலக்கற்கைக்கான உதவிகளை வழங்குமிடத்து அவர்களது எதிர்காலத்தை ஒளிபெறச் செய்யலாம்.

ஒரு மாணவருக்கு இலங்கைரூபாய் ஐயாயிரம் மாதாந்தம் தேவைப்படுகிறது.

உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள். மாணவர்களுடைய விபரங்களைத் தந்துதவுவோம். நீங்கள் நேரடியாகவே மாணவர்களுடன் தொடர்புகளைப் பேணி உதவிகளை வழங்கலாம்.

உதவிகோரும் 30 மாணவர்களின் விபரங்கள்

1) நிசாந்தினி கனகரத்தினம்
கலைப்பிரிவு

2)கந்தையா பரமேஸ்வரன்
முகாமைத்துவம் 1ம் வருடம்

3) தனபாலசிங்கம் பிரதீப்
பெளதீக விஞ்ஞானம்

4)ஆறுமுகம் அமலன்
மீன்பிடியியல் விஞ்ஞானம்

5) கணேசலிங்கம் வினோ
சமூகவியல் 1ம் வருடம்

6) சீவரத்தினம் தாரகன்
கலைப்பீடம் 1ம் வருடம்

7) நடராசா கிரிநாத்
மருத்துவம் 1ம் வருடம்

8) செல்வராசா கயோதீபன்
கலைப்பிரிவு 1ம் வருடம்

9) அன்ரன் பெனடிக்ற் யூட்குமார்
முகாமைத்துவம் 2ம் வருடம்

10) கந்தசாமி சாரங்கன்
விவசாயம் 1ம் வருடம்

11)கனகலிங்கம் விக்னா
கலைப்பிரிவு 1ம் வருடம்
12) கந்தையா சிறீகாந்
கலைப்பிரிவு 1ம் வருடம்

13) செல்லன் கீரன் (ஜனாதிபதியிடம் பரிசு பெற்றவர் 4 கிடைத்தது)
முகாமைத்துவம் 2ம் வருடம்

14) நவரத்தினம் தருசன்
கலைப்பீடம் 2ம் வருடம்

15) கந்தையா பரமேஸ்வரன்
முகாமைத்துவம் 1ம் வருடம்

16) சுகுமாரன் கயிலாயபிள்ளை
2ம் வருடம் முகாமைத்துவம்.

17) பாலசிங்கம் பாலகுமாரன்
கற்கும் வருடம்முதலாம் வருடம் (இன்னும் 3வருடங்கள் கற்க வேண்டும்)
முகாமைத்துவம்.

18)பெயர் - மாயன் சுகந்தன்
கற்கும் வருடம்இரண்டாம் வருடம்
விளையாட்டு விஞ்ஞானம்.

19)பெயர் - கனகரத்தினம் மயூரன்
கற்கும் வருடம் – 2ம் வருடம்.
விளையாட்டு விஞ்ஞானம்.

20)பெயர் - குமாரசாமி குகன்
கற்கும் வருடம்முதலாம் வருடம் (இன்னும் 3வருடம் கற்க வேண்டும்)
வணிகத்துறை.

21) சுலக்ஸன் தயாபரன்
முதலாம் வருடம் , உயிரியல் விஞ்ஞானம்

22) நிசாந்தன் கமலநாதன்
கலைப்பிரிவு 1ம் வருடம்

23) கமலேஸ்வரன் பஞ்சநாதன்
கலைப்பிரிவு 1ம் வருடம்

24) நவரத்தினம் நவநந்தன்
முகாமைத்துவம் முதலாம் வருடம்

25) றாயேஸ் துரைச்சாமி
2ம் வருடம் கலைப்பிரிவு

26) சுரேந்திரன் சுந்தரலிங்கம்
1ம் வருடம் விஞ்ஞானம்

27) உதயகுமார் பழனியாண்டி
1ம் வருடம் முகாமைத்துவம்

28) ரமேஷ்குமார் காளிமுத்து
கலைப்பீடம் 2ம் வருடம்

29) சிவராசா வேலுச்சாமி
கலைப்பீடம் 1ம் வருடம்

30) மகேந்திரம் சுப்பிரமணியம்
கலைப்பிரிவு 2ம் வருடம்

Sunday, June 13, 2010

ஒரு மாவீரனின் மனைவி பேசுகிறாள்

இன்றைய குரலுக்குரியவள் ஒரு மாவீரனின் மனைவி. ஒரு தளபதியாய் எத்தனையோ வெற்றிகளுக்கெல்லாம் வேராக இருந்த ஒரு மாவீரனினுடன் வாழ்ந்த வாழ்வின் இனிமைகளையும் அவனை இழந்த துயரின் வலிகளையும் பகிர்கிறாள். இந்தப் பெண்ணின் துயரங்கள் ஆயிரமாயிரம் தமிழ்ப்பெண்களின் கண்ணீரின் கதைகளாக வருகிறது. வெற்றிகளை மட்டுமே கேட்ட காதுகளிற்கு இத்தகைய கண்ணீரின் கனம் புரியாமலேயே இருந்திருப்பதை உணர்கின்ற தருணங்களில் இந்த இழப்புகள் பிரிவுகளுக்காக நாமென்ன செய்தோமென்ற கேள்வியே மிஞ்சிக்கிடக்கிறது.

வாழ்வும் மரணமும் இயற்கையின் தீர்வாகிற போதே மனிதம் எத்தனை தவித்துப்போகிறது. ஆனால் எங்கள் மண்ணிலும் எங்கள் மனிதர்களிலும் வாழ்வு துயராலேயே தின்னப்பட்டிருக்கிறது. இதோ ஒரு மாவீரனின் மனைவி பேசுகிறாள். இவளது கண்ணீரின் ஊடாக கனக்கின்ற துயரங்களின் பாரம் உங்களின் சிந்தனைக்காக….